Sunday, September 24, 2017

ஒரு குட்டி கதை

____
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.

அப்போது, செருப்பு பிஞ்சுபோச்சு..
அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார்.

அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு.
புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்...

காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார்.

அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.

அதற்கு அந்த வீட்டுக்காரர்
அந்த செல்வந்தரைப் பார்த்து...

ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான்.
நீங்க தாராளமாக வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

அதுக்கு பிறகு அவர் தன்னுடைய வேலைக்காரனை அனுப்பி செருப்பை பெற்று கொண்டார்

சில ஆண்டுகள் கடந்தன...

ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார்.

 அவரின் இறுதி ஊர்வலம்  செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது.

அப்போது நல்ல மழை.⛈

பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை.

அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு.
பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? "மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

[ அவ்வளவுதாங்க வாழ்க்கை ]___________

ஒரு பிஞ்சு போன செருப்புக்கு கிடைக்குற மரியாதை கூட நம்ம செத்த பின்னாடி நம்ம உடலுக்கு கிடைக்காது

வாழ்கின்ற கொஞ்ச நாள் எல்லார்கிட்டயும் முடிஞ்ச அளவுக்கு அன்பா வாழ்ந்துட்டு போவோம்...

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்கு மரியாதை)

                    👡⚰👟

❌❌❌மீத்தேன் என்னும் எமன் ❌❌❌


அதிர்ச்சி அடையாமல் படிக்கவும்.
 இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்...

மீத்தேன் என்னும் எமன்.  இன்று காலை தஞ்சையில்  காவேரி பாசன
 பகுதிகளை பாலைவனமாய் மாற்ற  கூடிய மீத்தேன்  எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை  மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய  கருத்தரங்கத்திற்கு செல்லும்  வாய்ப்பு கிட்டியது..ஏற்கனவே இது பற்றி அறிந்திருந்தாலும்  மேலும் அது பற்றிய விளக்கங்கள்  தெளிவாய் அறிய  வேண்டி கலந்துகொண்டேன்.

ஒரு வரியில் சொல்ல கூடிய தகவல்  அல்ல இது...அனைவரையும்  அதாவது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அழிக்க கூடிய  கொடிய அரக்கன்  இது எனபது அறிந்து பெரும்  அதிர்ச்சியே ஏற்பட்டது.

அனைத்து நட்புகளுக்கும் நான்  வைக்கும்  வேண்டுகோள் ....பொறுமையாய்
 படித்து அறிந்து இதை முடிந்த  அளவுக்கு பகிருங்கள் என்பதே. முற்றிலும் பாலைவனமாய்  மாறப்போகும் தமிழகத்தின்  நெற்களஞ்சியமாம் தஞ்சை மாவட்டம்  என்றும்  அதோடு சேர்ந்து பாதிக்கபடப்போகும் மாவட்டங்கள்
 திருவாரூர் ,நாகை மாவட்டம் ஆகிய  இரண்டும் தான் என்பதே நான்  இது வரை அறிந்த  விபரம்...உண்மை அதுவல்ல  என்பதை பல தகவல்களோடும் ,
நடந்த உண்மைகளோடும்  ஒப்பிட்டு இன்று நடந்த  கருத்தரங்கில் பொறியாளர்கள்  கூறியது மனதை பதைபதைக்க வைத்தது.

மீத்தேன் எடுக்க போகும் விபரம்  இங்கு இருப்போற்க்கே சரிவர தெரியாத
 ஒரு செய்தி என்பதே உண்மை..இதே கருத்தை இன்றைய  கருத்தரங்கிலும் பகிர்ந்தனர். இன்னும் அதிக அளவில்  இது மக்களை அடைய  வேண்டும்.. .எதிர்ப்பு வலுக்க  வேண்டும் என்றும் தெரிவித்தனர்.. எங்கேயோ போடப்போகும்  ஆழ்துளை கிணறுதானே நமக்கு என்ன  வந்தது என்று எண்ண வேண்டாம்  தோழமைகளே..

1.நிலத்தடியில் சுமார் 6000 அடி ஆழத்தில்  நிலக்கரியோடு இருக்கும்
 மீத்தேனை எடுக்க  நிலக்கரி இருக்கும் மட்டம்  வரை நிலக்கரிப் படிவத்தில்
 இருக்கும் நீரை இறைக்கவேண்டும்.

2.கடும் உப்பும், பிற மாசுகளும்  நிறைந்த இந்த நீர், நிலத்தில் வாழும்
 தாவர உயிரியல் மற்றும்  நுண்ணுயிர்களைக் கொல்லும்  ஆற்றல் வாய்ந்தது.

3.அதோடு நிலம் சுடுகாடாய்  மாறும்.

4.கடல் நீர் உள் நுழையும்.

5.நிலம் சுமார் 20 அடிகளுக்கு உள்வாங்கும்.

6.கட்டிடங்கள், பாலங்கள், ஆற்றுக்கரைகள் , கோயில்கள்  சிதையும். நிலநடுக்கங்கள்  ஏற்படும் .

7.குடிநீர் , பாசன நீர் தரும்  நிலத்தடி நீர்பிடிப்புகள் வற்றிப்  போகும்.

8.மீதம் இருக்கின்ற நீர்நிலைகளிலும்  ஆழ்துளை குழாய் இட  பயன்படுத்திய ரசாயனங்கள், மீத்தேன் ஆகியவை கலக்கும். இச்செயல் முறை மண்ணையும், நீரையும் நஞ்சாக்கி நிரந்தரமாக  நாசம் செய்யும். ஒப்பந்தம் போட்டிருக்கும்  ஜி.இ.இ.சி கம்பெனிக்கு கொடுக்கபோகும்  இடம் 691 சதுர
 கிலோமீட்டர் . ஆனால்  பாதிப்பு ஏற்படபோகும்  மூன்று மாவட்டங்களின்
 பரப்பளவு 8270 சதுரகிலோமீட்டர்,  அதாவது 21 லட்சம் ஏக்கர்
 நிலங்களை நாசம் செய்யும்.

மொத்த ஆழ்துளை கிணறுகளின்  எண்ணிக்கை 2000. அடுத்த கட்டமாய் பாதிக்கபோகும்  மாவட்டங்கள் புதுக்கோட்டை, திருச்சி மற்றும் கடலூரும் தான். இதனால் காற்றும் மாசுபட  போவதால் அது ஒட்டுமொத்த
 தமிழகத்தையும் பாதிக்கபோகும் கொடிய அரக்கன் என்பதே நிதர்சனம்.
ஒட்டுமொத்தமாக  இப்பகுதி பாலைவனமாய் மாற  போவதால் 50 லட்சம் மக்களின்  வாழ்க்கை கேள்விக்குறியாய்  நிற்கிறது..சென்ற
 அரசு ஒப்பந்தத்தில்  கையெழுத்து இட்டு தற்போது ஆங்காங்கே நடைபெறும்
 போராட்டம் காரணமாய் இந்த  அரசு தற்காலிகமாய்  நிறுத்தி வைத்துள்ளது.

இந்த  ஒப்பந்தம் மட்டும் மீண்டும்  தொடர்ந்தால் ...............  தமிழகத்தை யாராலும் காப்பாற்  இயலாது. .அதற்கு முன் மக்கள்  விழித்தெழ வேண்டியது மிக  அவசியம் மற்றும் அவசரமும் கூட.

(ஒரு வேண்டுகோள் - ஷேர் செய்)
R.SARAVANAN.MA.BL.MPHIL.MBA.MLM.
 ADVOCATE.HIGH COURT.
 CHENNAI.
 PLEASE SHARE IT.
 THANK YOU.TAMILNADU

Unga kitta irukara ella groupkum anupunga plzzz.........

<<< Shared as received in Whatsapp >>>

நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி 


டாக்டர். அனிதா சைமன் (எம். டி. குழந்தை மருத்துவர்). நீரிழிவு நோய்க்கு ஒரு நல்ல செய்தி சொல்லியிருக்கிறார்.

இந்த தகவலை தேவைப்படும் சிலருக்கு உதவ கீழேயுள்ள செய்தியை நீங்கள் அனுப்புவீர்கள் என நம்புகிறேன்.

ஒரு பெண் (65) கடந்த 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய் காரணமாக ஒரு நாளைக்கு இரண்டு முறை இன்சுலின் எடுத்துக்கொண்டார்.

அவர் ஒரு பதினைந்து நாட்களுக்கு வீட்டில் செய்த (கீழே கொடுக்கப்பட்டுள்ள) மருந்தை பயன்படுத்தினார். அதனால் இப்போது அவருக்கு நீரிழிவு நோய் முற்றிலும் குணமாகிவிட்டது. இனிப்பு உட்பட அவருக்குப்பிடித்த மற்ற உணவுகளை சாதாரணமாகவும் மற்றும் சுதந்திரமாகவும் சாப்பிடும் நிலைமைக்கு அவர் மாறிவிட்டார்.

டாக்டர்கள் அவளுக்கு இன்சுலின் மற்றும் வேறு எந்த இரத்த சம்பந்தமான சர்க்கரை மருந்துகளை இனிமேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதை நீங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை பல நபர்களுக்கு தயவு செய்து அனுப்புங்கள், மேலும் இது அதிகபட்ச நன்மைகளை அளிக்கும்

டி.ஆர். டோனி ஆல்பீடா (பாம்பே சிறுநீரக நிபுணர்) விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் விரிவான சோதனைகள் செய்தார் மற்றும் நீரிழிவுக்கான ஒரு வெற்றிகரமான சிகிச்சையை கண்டுபிடித்தார்.

இன்றும் நீரிழிவு நோயால் பல நாட்கள், முதியவர்கள், குறிப்பாக பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நீரிழிவு சிகிச்சைக்கான தேவையான பொருட்கள்:

1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 - கருப்பு விதைகள் (கொலுஞ்சி) 100 கிராம்
தமிழ் மொழியில் கொலஞ்சி என்றால் கருஞ்ஜீரகம்.

தயாரிக்கும் முறை:

5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்.
அதை 10 நிமிடம் கொதிக்கவைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்க அனுமதிக்கவும்.
அது குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி குடம் அல்லது பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

உங்கள் வயிறு காலியாக இருக்கும் பொழுது, ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை 7 நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.

அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த சிகிச்சையால்  2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள். எல்லோரையும் போல எந்த பிரச்சனை இல்லாமல் சாதாரணமாக எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

குறிப்பு:

ஒரு வேண்டுகோள். முடிந்த அளவிற்கு இதை உங்கள் நண்பர் மற்றும் எல்லா குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெறியப்படுத்தவும். இதனால் மற்றவர்களும் நன்மை அடையலாம்.

இது எல்லாம் இயற்கையாக கிடைக்கும் பொருள்கள். இதனால் நம் உடலுக்கு நல்லதே. எந்த தீங்கும் இல்லை. இந்த சிகிச்சையைப் பொறுத்தவரையில் எவருக்கும் எவ்வித பாதிப்புமின்றி முயற்சி செய்யலாம்.

<தமிழில் மொழியில் மாற்றம் செய்யப்பட்டது>

மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் நண்பர்களே


1.பிள்ளைகளை ஆங்கிலவழி கல்வியில் படிக்கவச்சுகிட்டு, தமிழுக்கு ஆதரவாக போராட வேண்டியது.

2. ஓவன்ல சமைத்து A/c அறையில உட்கார்ந்து சாப்பிட்டு, அணுமின்சாரத்திற்கு எதிராக போராட வேண்டியது.

3. கேஸ் அடுப்புல பால் காய்ச்சு குடித்துவிட்டு, மீத்தேனுக்கெதிரா போராட வேண்டியது.

4.பெட்ரோலில் வண்டிய ஓட்டிக்கொண்டு, ஹைட்ரோகார்பனுக்கெதிரா போராட வேண்டியது.

5. விவசாயமே செய்யாது, விவசாயத்திற்கு ஆதரவாக போராட்டம்.

6. மாடு வெட்டி திண்ணுட்டு, மாட்டுக்கு ஆதரவாக போராட்டம்.

7. சாதி சலுகைகளை அனுபவச்சிகிட்டு, சாதிக்கெதிரா போராட்டம்.

8. இந்துமதத்தை மட்டும் இழிவு படித்திகிட்டு, மதசார்பிண்மைக்கு ஆதரவாக போராட்டம்.

9. பணம் கொடுத்து,பணம் வாங்கி ஓட்டு போட்டு, ஊழலக்கு எதிராக போராட்டம்.

10.மதுவிற்கு எல்லாம் அடிமையாகிவிட்டு, மதுக்கெதிரா போராட்டம்.

11. நீர்நிலைகளை எல்லாம் மாசு உண்டாக்கி அழித்துவிட்டு, நீருக்காதவராக போராட்டம்.

12. அரசிற்கு வரியே கட்டாமல், வளர்ச்சி எங்கே என்று கேட்டு போராட்டம்.

13. தவறு செய்தவர்களை தண்டித்தால், அடக்குமுறை,சர்வாதிகாரம்னு சொல்லி போராட்டம்.

அனைத்தையும் மக்களே செய்துவிட்டு
இந்தியாவை சில ஆண்டுகள் ஆட்சி செய்பவர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம் என்று சொல்லும் பொழுதுதான் வேடிக்கையாக உள்ளது.

தனி மனதின் ஒவ்வொருவரும் மாறினால் மட்டுமே நிச்சயம் மாற்றம் பிறக்கும்.
😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨😨
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்....
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்......
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்....
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்....
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்....
எங்கடா என் மொழி என்று கேட்டேன்.....

கடைசியா பதிலைச்சொன்னான்.....
இதையெல்லாம் வித்து தான்.....
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்....
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்....
மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்....
மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்....
மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்.....
கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்....
தாலிக்கு தங்கமும்....அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம் என்றார்கள்...

அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்...? என்றேன்....

அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே ...!! என்றார்கள்....
யாரடா நீங்கள் ...? என்றேன்....

நாங்கள் தான் #அரசியல்வாதிகள் என்றார்கள்.....!!

*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!

<<< Shared as received in Whatsapp >>>

வெற்றி !!! தோல்வி!!!


✌ 4 வயதில், தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ 8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

✌ 12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

✌ 18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

✌ 22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

✌ 25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

✌ 30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

✌ 35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ 45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

✌ 50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ 55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

✌ 60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

✌ 65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ 70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ 75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

✌ 80 வயதிற்கு மேல் மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

     Be defeated to become victoriuos.

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

✌ அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..

✌ அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..

✌ துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..

✌ பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..

✌ சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..

✌ நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..

✌ ஆகவே தோற்று போ,

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி. வகுப்போம்..நன்றி.. 🙏

<<< Shared as received in Whatsapp >>>

Saturday, September 23, 2017

பிள்ளைக்கு ஹார்லிக்ஸ், பூஸ்ட் வாங்கி  கொடுக்காதீர்கள்


👹என்றுமே கெட்டு போகாத கெமிக்கல்👹

👹இது ஒரு சுவையூட்டி மட்டும் தான்😋

👧🏻குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியம் அற்றது ❌

❌ஹார்லிக்ஸ்,👹

❌பூஸ்ட், 👹

❌காம்ப்ளான்,👹

❌பீடியாசூர், சத்து மாவே அல்ல...❌


இதுதான் உண்மை.  * நம் பாரம்பரிய சத்தான சத்து💪 மாவு..*


💪இதை தயாரிக்கும் முறை:

இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்:
  1. ராகி 2 கிலோ 
  2. சோளம் 2 கிலோ
  3. நாட்டு கம்பு 2 கிலோ 
  4. பாசிப்பயறு அரை கிலோ 
  5. கொள்ளு அரை கிலோ 
  6. மக்காசோளம் 2 கிலோ
  7. பொட்டுக்கடலை ஒரு கிலோ 
  8. சோயா ஒரு கிலோ 
  9. தினை அரை கிலோ 
  10. கருப்பு உளுந்து அரை கிலோ 
  11. சம்பா கோதுமை அரை கிலோ
  12. பார்லி அரை கிலோ 
  13. நிலக்கடலை அரை கிலோ 
  14. மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ 
  15. ஜவ்வரிசி அரை கிலோ 
  16. வெள்ளை எள் 100 கிராம் 
  17. கசகசா 50 கிராம் 
  18. ஏலம் 50 கிராம் 
  19. முந்திரி 50 கிராம் 
  20. சாரப்பருப்பு 50 கிராம்
  21. பாதாம் 50 கிராம் 
  22. ஓமம் 50 கிராம் 
  23. சுக்கு 50 கிராம் 
  24. பிஸ்தா 50 கிராம் 
  25. ஜாதிக்காய் 2 
  26. மாசிக்காய் 2
💪செய்முறை :
ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.

சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.

தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

💪பயன்கள்:

🎭1.ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

🎭2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்.

🎭3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

🎭4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

🎭5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

🎭6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

🎭7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

🎭8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

👉குறிப்பு:  5 மாதம் கெடாது.

🎭1.சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.

🎭2.பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை.

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து உங்களின் அக்கறை மிக்க குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தி நலமும் வளமும் பெறுங்கள்.

👉குறிப்பு :

 காலையில் அவசரமாக வேலைக்கு போகிறவர்கள் கண்டிப்பாக குடியுங்கள்...

📲பகிருங்கள் நம் மக்கள் உடல் பலம் அடையட்டும்....💪🥛😋

யுனிவர்சல் மனித உரிமை பாதுகாப்பு கழகம் ( UHRPC )

<<< Shared as received in Whatsapp >>>

ஒரு குருவி இரண்டு மரம் 


ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரம் இருந்தது!! 🌳🌳
அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி 🐥 மரத்திடம் கேட்டது
மழை காலம் தொடங்க☁ இருப்பதால்
நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது

முதலில் இருந்த மரம் முடியாது என்றது
😣😣😣😣😣😣😣😣

அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது
😌😌😌😌😌😌😌

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் 🐣🐤🐥🐦

அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது

தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிறித்து கொண்டே சென்னது  எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்றது!!!!

அதற்கு மரம் கூறிய பதில் :  எனக்கு தெறியும் நான் வழுவடைந்து விட்டேன்😑 எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன் தண்ணீரில் அடித்து செல்லபடுவேன் நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்
உனக்கு இடம் இல்லை என்றேன் !!!! மன்னித்து விடு என்றது !!!!!! 😢

கருத்து:   உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீற்கள்
அவர் அவர் சூழ்நிலை அவருக்கு மட்டும் தான் தெரியும்!!!

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்...
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

<<< Shared as received in Whatsapp >>>

டெங்கு


டெங்கு முதலான கடும் ஜூரத்தைக் குணப்படுத்தி பிளட் கவுண்டை சீர் செய்யும் இலகுவான மருந்து இலங்கை பாராளுமன்ற அரங்கிலும் பேசப்பட்டு வியப்பூட்டியது.

அது என்ன வென்று தெரியுமா?

💌 பப்பாளி மரத்தின் கொழுந்து இலையின் சாற்றை நீர் கலக்காமல் எடுத்து நோயாளி அருந்த வேண்டும்.


  • சிறுவர்கள் ஒரு மேசைக்கரண்டி அளவும், 
  • பெரியோர் இரண்டு மேசைக்கரண்டி அளவும் அருந்தலாம்.


ஆச்சர்யம் ஆனாலும் உண்மை. சிறுது நேரத்திலேயே உடலில் மாற்றம் ஏற்பட்டு குணமடைவதைக் காணலாம். 😲😲😲😲😲😲

இந்த பார்மூலாவை பயன்படுத்தி #பெப்ரிக்கா பில்ஸ் என்று டேப்லட்டுகளும் இலங்கையில் தயார் செய்யப்பட்டு விட்டது.


இதனை நீங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடாது பகிருங்கள்

கெரிகா பப்பாயா லீஃப் எக்ஸ்ட்ராட் டெப்லட் என்னும் இந்த மருந்து 48 மணி நேரங்களில் டெங்குவை குணப்டுத்துகின்றது...

<<< Shared as received in Whatsapp >>>